உள்ளூர் செய்திகள்
பலி

கடலூரில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2022-01-05 10:33 GMT   |   Update On 2022-01-05 10:33 GMT
கடலூரில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலன் (வயது 35) என்பதும், சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஜெயசீலன் நேற்று மாலை சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டதும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற போது அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஜெயசீலன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News