உள்ளூர் செய்திகள்
தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவ, மாணவிகள்
ஆண்டிமடம் பகுதியில் ஆர்வமுடன் தாமாக முன்வந்து மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதியில் அரசு பள்ளிகளில் பயிலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆண்டிமடம், விளந்தை, மருதூர், பூவாணிபட்டு அரசு மேல்நிலைப்பள்ளிகள், இலையூர், கவரப்பாளையம் உயர்நிலை பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 9, 10, 11, 12&ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆண்டிமடம் விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமிற்கு ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவாஜி, அருளப்பன் முன்னிலை வகித்தனர். கொரோனா தடுப்பூசி முகாமில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தாமாகவே முன்வந்து ஆண்டிமடம் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் நடைபெற்ற முகாமில் 573 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ் முருகன் மற்றும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.