உள்ளூர் செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே நகை திருடிய 3 பேர் கைது

Published On 2021-12-31 15:30 IST   |   Update On 2021-12-31 15:30:00 IST
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகை திருடியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வடக்கு வீதியில் வசிப்பவர் ஷேக் அகமத்துல்லா. இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றபோது காரில் வந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்க காசுகளை திருடி சென்றுவிட்டனர்.

இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி கேமராவின் பதிவுகளை கொண்டு திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தேத்தாகுடி தெற்கு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்து போது திருட்டு வழக்கில் சம்பந்தபட்ட அதே கார் வந்துள்ளது. அதனை மறித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் தோப்புத்துறையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஷேக்அகமத்துல்லா வீட்டில் திருட்டில் பயன்படுத்திய கார் என்பதும், அதில் இருந்தவர்கள் திருட்டு கும்பல் என்பதும் தெரியவந்தது.

வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து இரண்டு மாதமாக தேடிவந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த தமிழ் செல்வன் (வயது 31), கும்மிடிபூண்டி மணிகண்டன் (33), சுரேஷ் (36) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் காசுகள் மீட்கப்பட்டது.

Similar News