உள்ளூர் செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஆண்டிமடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Published On 2021-12-30 15:26 IST   |   Update On 2021-12-30 15:26:00 IST
ஆண்டிமடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டப்பட்ட சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள திருக்களப்பூர் கிராமம், பெரிய ஏரி அருகே மன்னார்சாமி கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சூலாயுதத்தை பிடுங்கி அங்குள்ள உண்டிலையும் உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி சென்றார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 

ஆனால், எவ்வளவு பணம் திருட்டு போனது என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து திருக்களப்பூர் கிராம முக்கியஸ்தர்கள் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன்பேரில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News