உள்ளூர் செய்திகள்
கைது

நாகையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2021-12-28 16:34 IST   |   Update On 2021-12-28 16:34:00 IST
நாகையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிப்பாளையம்:

நாகையை அடுத்த பாப்பாகோவில், சின்னப்பாலம் அருகே கஞ்சா விற்பதாக நாகை டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பாப்பா கோவில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது25) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர். ஆகாசுக்கு கஞ்சா பொட்டலங்கள் வழங்கிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News