உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
புதுச்சேரி மாநிலம் திப்பராயபேட்டை பகுதியை சேர்ந்தவர் தேசிகன். இவரது மனைவி நதாலி (வயது 50). இவர்கள் ஓசூர் சேவகானப்பள்ளி அருகே கக்கனூரில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நதாலி, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதற்காக பல மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.