உள்ளூர் செய்திகள்
சீர்காழி ரவுண்டானா பகுதியில் விபத்து- கொள்ளிடம் வேளாண் உதவி அலுவலர் பலி
சீர்காழி ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கொள்ளிடம் வேளாண் உதவி அலுவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சீர்காழி:
மணல்மேடு அருகே குமாரமங்கலம் மேற்குதெருவை சேர்ந்தவர் ராஜா ராமன் மகன் கண்ணன் (40) இவர் கொள்ளிடம் வேளாண்மைத்துறையில் வேளாண் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு அருகே குமாரமங்கலம் மேற்குதெருவை சேர்ந்தவர் ராஜா ராமன் மகன் கண்ணன் (40) இவர் கொள்ளிடம் வேளாண்மைத்துறையில் வேளாண் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.