உள்ளூர் செய்திகள்
கைது

கிருஷ்ணகிரியில் வீட்டில் நகை திருடியவர் கைது

Published On 2021-12-24 15:22 IST   |   Update On 2021-12-24 15:22:00 IST
கிருஷ்ணகிரியில் வீட்டில் நகை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சித்ரா வைசாலினி (வயது 25). இவர் குடும்பத்துடன் வீட்டில் கீழ் தளத்தில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று மர்ம நபர் இவரது வீட்டிற்கு வந்து, வீட்டின் முதல் தளத்தில் உள்ள கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த 2½ பவுன் தங்க நகையை திருடி சென்றார். இது குறித்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் நகையை திருடியது கிருஷ்ணகிரி வி.ஐ.பி. நகரை சேர்ந்த சதீஷ்குமார் (25) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News