உள்ளூர் செய்திகள்
அரியலூரில் கடும் பனிப்பொழிவு

அரியலூரில் கடும் பனிப்பொழிவு

Published On 2021-12-23 13:53 IST   |   Update On 2021-12-23 13:53:00 IST
அரியலூரில் பகலில் வெயில் அடிக்கும் அளவிற்கு இரவு பனி இருமடங்காக உள்ளதால் குழந்தைகள், வயதானவர்கள் குளிரால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் அனைத்து ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மருதையாறு, கொள்ளிடம் ஆறுகளில் உபரி நீர் ஓடுகிறது. கடந்த 17-ந் தேதி மார்கழி மாதம் பிறந்த பிறகு பனியின் தாக்கம் அதிகமாகி மாலை 5 மணிக்கு கடுங்குளிர் ஆரம்பித்து காலை 8 மணி வரை உள்ளது.

வாகனங்கள் பகலிலேயே முகப்பு விளக்குகளை போட்டு செல்லும் அளவுக்கு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகலில் வெயில் அடிக்கும் அளவிற்கு இரவு பனி இருமடங்காக உள்ளதால் குழந்தைகள், வயதானவர்கள் குளிரால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Similar News