உள்ளூர் செய்திகள்
கூட்டம்

அரியலூரில் 24-ந்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Published On 2021-12-22 16:45 IST   |   Update On 2021-12-22 16:45:00 IST
கொரோனோ காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கிள் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். மேலும் கொரோனோ காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கவேண்டும் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Similar News