உள்ளூர் செய்திகள்
விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள செங்குழி கீழத்தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது 35). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது மனைவி சீதா, மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் சீதா கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.