உள்ளூர் செய்திகள்
கைது

கண்ணமங்கலம் அருகே நடந்த திருட்டு வழக்கில் வாலிபர் கைது

Published On 2021-12-20 16:45 IST   |   Update On 2021-12-20 16:45:00 IST
கண்ணமங்கலம் அருகே நடந்த திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலத்தை அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் கடந்த மாதம் நகைகள் திருட்டுப்போனது. இதுகுறித்து கண்மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் கேசவன் (வயது 21) என்பவரை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News