உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

ஆரணி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

Published On 2021-12-20 10:33 GMT   |   Update On 2021-12-20 10:33 GMT
ஆரணி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆரணி:

ஆரணி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சங்கர் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக அவருக்கு சளி தொந்தரவு இருந்து வந்தது.

அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவு நேற்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News