உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகா பாலேகானூர் அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் கவியரசு (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவருடைய தாய் கண்டித்தார். இதில் மனமுடைந்த கவியரசு ஓசூர் அருகே தொடுதேப்பள்ளியில் ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.