உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலி
சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள டேம் எப்பளத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் எப்பளம்-மேடுப்பள்ளி சாலையில் தேவாலயம் அருகில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து, சூளகிரி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.