உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2021-12-19 16:54 IST   |   Update On 2021-12-19 16:54:00 IST
சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள டேம் எப்பளத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் எப்பளம்-மேடுப்பள்ளி சாலையில் தேவாலயம் அருகில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து, சூளகிரி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Similar News