உள்ளூர் செய்திகள்
வேப்பனப்பள்ளி அருகே குட்கா விற்றவர் கைது
வேப்பனப்பள்ளி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி போலீசார் பூதிமுட்லு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் சோதனை செய்த போது ரூ.1,616 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் நூரான் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.