உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

பர்கூர் அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெண் தவறி விழுந்து பலி

Published On 2021-12-19 09:42 GMT   |   Update On 2021-12-19 09:42 GMT
பர்கூர் அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

பர்கூர் தாலுகா சிகரலப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி வனிதா (வயது 41). இவர்களின் மகன் கார்த்தி (22). இந்தநிலையில் வனிதாவும், கார்த்தியும் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வளைவில் திரும்பிய போது பின்னால் அமர்ந்திருந்த வனிதா தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வனிதா இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News