உள்ளூர் செய்திகள்
விஷம்

சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-12-18 16:04 IST   |   Update On 2021-12-18 16:04:00 IST
சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு அருகே ஆத்தூரை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா (38), இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் இருந்த சரவணன் விஷம் குடித்து விட்டார். இதையறிந்த அவரது மனைவி அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News