உள்ளூர் செய்திகள்
கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கடையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் நாமால்பேட்டை பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் நரசிம்மலு குட்டா (வயது62). இவர் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது, கடையில் பதுக்கிவைத்திருந்த 16.7 கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நரசிம்மலு குட்டாவை, போலீசார் கைது செய்தனர்.