உள்ளூர் செய்திகள்
சீர்காழி, செம்பனார்கோவில் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
சீர்காழி:
சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட துணை மின்நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை மின்வினியோகம் இருக்காது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பகுதிகளான வைத்தீஸ்வரன் கோவில், அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, தென்பாதி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூர், எருக்கூர், மாதிரிவேளூர், வடரெங்கம், அகனி, குன்னம், கொள்ளிடம், அணைக்கரை சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், அரசூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதேபோல செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மேமாத்தூர், கீழ்மாத்தூர், நல்லுச்சேரி, மேலகட்டளை, கடலி, நரசிங்கநத்தம், ஆறுபாதி மற்றும் பரசலூரில் ஒரு பகுதி 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின் உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் மரைக்காயர் தெரிவித்தார்.