உள்ளூர் செய்திகள்
மின்சார நிறுத்தம்

செந்துறை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2021-12-17 16:35 IST   |   Update On 2021-12-17 16:35:00 IST
செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது.
செந்துறை:

செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு, மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பணி முடியும் வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று செந்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News