உள்ளூர் செய்திகள்
திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2021-12-16 15:46 IST   |   Update On 2021-12-16 15:46:00 IST
குத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது35). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி இலக்கியா (27) 2 குழந்தைகளுடன் அரையபுரத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கி உள்ளார். அவ்வப்போது இலக்கியா ஆனாங்கூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

கடந்த 9-ந் தேதி சென்று வந்தவர் மீண்டும் நேற்றுமுன்தினம் மதியம் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த இலக்கியா உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் சங்கிலி, 850 கிராம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இலக்கியா குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் தொடர்புடைய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News