உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கூறைநாடு ஆராயத்தெரு அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் மகன் கலைவாணன்(வயது 27) என்பவரை பிடித்ததுடன் அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், கலைவாணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.