உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

உடையார்பாளையம் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் மீது வழக்கு

Published On 2021-12-15 15:44 IST   |   Update On 2021-12-15 15:44:00 IST
உடையார்பாளையம் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காக்காப்பாளையத்தை சேர்ந்த செல்லம்மாள்(வயது 34), உடையார்பாளையத்தை சேர்ந்த குமணவள்ளல்(55), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த செல்வம்(45), இடையார் ஏந்தலை சேர்ந்த முருகன்(45) ஆகியோர் அவர்களது மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News