உள்ளூர் செய்திகள்
கொள்ளை

ஜெயங்கொண்டத்தில் செவிலியர் வீட்டில் 43 பவுன் நகை திருட்டு

Published On 2021-12-14 10:30 GMT   |   Update On 2021-12-14 10:30 GMT
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செவிலியர் வீட்டில் 43 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசெல்வன். இவரது மனைவி புனிதா இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இளைய மகள் திருப்பதியில் கல்லூரியில் படித்து வருகிறார். புனிதா கிராம சுகாதார செலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் புனிதாவிற்கு பணி உயர்விற்கான கவுன்சிலிங், சென்னையில் நடைபெற உள்ளதையொட்டி, கடந்த சனிக்கிழமை தனது கணவருடன் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார். காலையில் பழனி செல்வனின் வீடு திறந்து இருப்பதைக் கண்ட அருகில் இருந்தவர்கள், இதுகுறித்து சென்னையில் இருந்த பழனிசெல்வதிற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்துசென்னையிலிருந்து கிளம்பிய பழனி செல்வன் வீட்டிற்கு வந்து பார்த்த போதுவீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடுத்த மாதம் தனது அண்ணனுக்கு நடைபெற உள்ள அறுபதாம் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த பணம், நகை மற்றும் மகள்களுக்காக சேர்த்துவைத்த நகை என 43 சவரன் நகை மற்றும் 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News