உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை
2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பணியில் வைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தும், சீல் வைத்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.
தரங்கம்பாடி:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக, கலெக்டர் லலிதா உத்தரவின்படி, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் பாலாஜி தலைமையில், வட்டாட்சியர் ராகவன், நகராட்சி ஆணையர் பாலு, நகர்நல அலுவலர் மருத்துவர் மலர்மன்னன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வாகனத்தில் சென்று, ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினர். தனியார் மருத்துவமனை, ஜவுளிக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் வேலையாட்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனரா என ஆய்வு மேற்கொண்டனர்.
கோட்டாட்சியர் பாலாஜி பேசும்போது, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பணியில் வைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தும், சீல் வைத்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திங்கள்கிழமை முதல் வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றார்.
மேலும், கொரோனா விதிமுறைகளை கடை பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ.8400 அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக, கலெக்டர் லலிதா உத்தரவின்படி, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் பாலாஜி தலைமையில், வட்டாட்சியர் ராகவன், நகராட்சி ஆணையர் பாலு, நகர்நல அலுவலர் மருத்துவர் மலர்மன்னன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வாகனத்தில் சென்று, ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினர். தனியார் மருத்துவமனை, ஜவுளிக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் வேலையாட்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனரா என ஆய்வு மேற்கொண்டனர்.
கோட்டாட்சியர் பாலாஜி பேசும்போது, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பணியில் வைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தும், சீல் வைத்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திங்கள்கிழமை முதல் வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றார்.
மேலும், கொரோனா விதிமுறைகளை கடை பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ.8400 அபராதம் விதித்தனர்.