உள்ளூர் செய்திகள்
விபத்து

மயிலாடுதுறையில் பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2021-12-09 16:45 IST   |   Update On 2021-12-09 16:45:00 IST
மயிலாடுதுறையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே அரங்கக்குடி இக்பால் தெருவை சேர்ந்த ரஹமத்துல்நிஷா மகன் யூசுப்கான் (வயது 19). இவர் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.காம். படித்து வந்தார்.

அப்பா இறந்து விட்டார். தாயுடன் வசித்து வந்த அவர் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்தபோது தருமபுரம் பர்மா காலனி அருகே தனியார் பேருந்து யூசுப்கான் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து பஸ் ஓட்டுநர், நடத்துனர் இருவரையும் கைது செய்தனர்.

Similar News