உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

Published On 2021-12-08 07:42 GMT   |   Update On 2021-12-08 07:42 GMT
அரியலூர் மாவட்டத்தில் தற்போது 15 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 2 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.

தற்போது 15 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 593 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 6,151 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Tags:    

Similar News