உள்ளூர் செய்திகள்
ரேஷன் அரிசி

காரைக்குடி அருகே லாரியில் கடத்திய 32 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-12-08 07:09 GMT   |   Update On 2021-12-08 07:09 GMT
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் காரைக்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணராஜா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சவுந்தராஜன், சுரேஷ் மற்றும் போலீசார் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூர் அருகேயுள்ள செட்டிநாடு பைபாஸ் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணப்பாறை பகுதியில் இருந்து வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 32 (1,520 கிலோ) ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன.

இதைத்தொடர்ந்து போலீசார், அந்த லாரியை ஓட்டி வந்த மணப்பாறை அடுத்த வையபட்டியைச் சேர்ந்த டிரைவர் சங்கர்(வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியுடன் கடத்தல் அரிசியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அந்த அரிசியை அறந்தாங்கி பகுதிக்கு கொண்டு செல்வது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை காரைக்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News