உள்ளூர் செய்திகள்
கொள்ளிடம் அருகே முத்துமாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், நேற்று காலை வந்தார். அப்போது கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு துர்கா ஸ்டாலின் அர்ச்சனை செய்தார். பின்னர் அவர், கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து வழிபட்டார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதேபோல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், நேற்று காலை வந்தார். அப்போது கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு துர்கா ஸ்டாலின் அர்ச்சனை செய்தார். பின்னர் அவர், கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து வழிபட்டார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதேபோல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.