உள்ளூர் செய்திகள்
கைது

திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம்- 2 பேர் கைது

Published On 2021-12-07 09:36 GMT   |   Update On 2021-12-07 09:36 GMT
மாமல்லபுரம் அருகே திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம் செய்து வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் கடந்த மாதம் 24-ந்தேதி ஆடுகளை திருட முயன்ற திரூப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கத்தை சேர்ந்த உமேஷ், வினித் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி திருட்டு ஆடுகளை இறைச்சி வியாபாரத்துக்கு வாங்கும் முள்ளிப்பாக்கத்தை சேர்ந்த சிதியோன், திருக்கழுகுன்றத்தை சேர்ந்த ஆதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்கள் 30க்கும் மேற்பட்ட திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம் செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News