உள்ளூர் செய்திகள்
பாலியல் வன்முறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை:முதியவர் கைது

Published On 2021-12-06 12:47 GMT   |   Update On 2021-12-06 12:47 GMT
சிவகங்கை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:

இளையான்குடியை அடுத்த சாலை கிராமம் பிச்சன் குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது70). இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுதொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபா ஆகியோர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கைது செய்தனர்.
Tags:    

Similar News