உள்ளூர் செய்திகள்
கொள்ளை

திருவிடைக்கழி முருகன் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

Published On 2021-12-06 16:04 IST   |   Update On 2021-12-06 16:04:00 IST
திருக்கடையூர் அருகே திருவிடைக்கழி கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முருகன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அருகே திருவிடைக்கழி கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோவில் சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாகும். பரிகார ஸ்தலமும் கூட. திருப்பணிகள் முடிந்து இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு மர்மநபர் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் உள்ளிட்ட போலீசார் புகாரின்பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News