உள்ளூர் செய்திகள்
கைது

வீட்டின் பின்புறம் பதுக்கப்பட்ட 309 மதுபாட்டில்கள் பறிமுதல்- ஒருவர் கைது

Published On 2021-12-05 10:27 GMT   |   Update On 2021-12-05 10:27 GMT
வீட்டின் பின்புறம் பதுக்கப்பட்ட 309 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் அருகே உள்ள செங்குழி பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்குழி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த சிற்றரசன்(வயது 50) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த 309 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிற்றரசனை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News