செய்திகள்
நீலகிரியில் புதிதாக 16 பேருக்கு கொரோனா
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 80 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 17 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் இதுவரை 33 ஆயிரத்து 673 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.