செய்திகள்
சூளகிரி அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலி
சூளகிரி அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 48). தையல் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் கோபசந்திரம் பக்கமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நாகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.