செய்திகள்
கைது

மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Published On 2021-11-30 12:03 IST   |   Update On 2021-11-30 12:03:00 IST
மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குருபரப்பள்ளி போலீசார் பந்தாரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளர் கந்தசாமி (46) என்பவரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News