செய்திகள்
கைது

காரைக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-11-23 13:28 GMT   |   Update On 2021-11-23 13:28 GMT
காரைக்குடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் தெற்கு போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு வந்த சத்யா நகரைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 21) என்பவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவன் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் விற்றுக்கொண்டிருந்த சேகர் (வயது 64) என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
Tags:    

Similar News