செய்திகள்
தற்கொலை

செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை

Published On 2021-11-22 10:50 GMT   |   Update On 2021-11-22 10:50 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சஞ்சீவி சுரேந்தர் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

சஞ்சீவி சுரேந்தர் அடிக்கடி தனது செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்தார்.

இதன்காரணமாக மிகுந்த மனவேதனை அடைந்த சஞ்சீவி சுரேந்தர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News