செய்திகள்
வடகிழக்கு பருவமழை

கரையை கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Published On 2021-11-18 22:42 GMT   |   Update On 2021-11-18 22:42 GMT
கனமழையை தொடர்ந்து தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுவை இடையே அதிகாலை 3.30 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கியது.  இதனால் சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

கரையைக் கடக்கும்போது மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News