செய்திகள்
விஷம்

கல்லிடைக்குறிச்சியில் விவசாயி தற்கொலை

Published On 2021-11-17 11:29 GMT   |   Update On 2021-11-17 11:29 GMT
கல்லிடைக்குறிச்சியில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

கல்லிடைக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 59), விவசாயி. கடந்த 2 வருடமாக இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்தார். இதில் மனம் உடைந்த செல்லப்பா வி‌ஷம் குடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கல்லிடைகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News