செய்திகள்
தற்கொலை

செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை

Published On 2021-11-17 11:27 GMT   |   Update On 2021-11-17 11:27 GMT
ஆழ்வார்குறிச்சி அருகே செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் செல்வி (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி அடிக்கடி செல்போனில் விளையாடி வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் தெரிகிறது.

இதில் மனம் உடைந்த செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News