செய்திகள்
டி.ஆர்.பாலு, அமித் ஷா

தமிழ்நாட்டுக்கு ரூ.2079 கோடி மழை நிவாரணம் தேவை - அமித் ஷாவிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

Published On 2021-11-17 07:11 GMT   |   Update On 2021-11-17 07:11 GMT
தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் டி.ஆர்.பாலு எம்பி கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி:

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு மழை வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்தார். 

‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 12 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் சராசரி அளவை விட 52 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. மழையால் 49 ஆயிரத்து 757 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ.2079 கோடி வழங்க வேண்டும். மழை வெள்ள நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.550 கோடி வழங்க வேண்டும்’ என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News