செய்திகள்
கோப்புபடம்

மடத்துக்குளத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டுகோள்

Published On 2021-11-17 06:50 GMT   |   Update On 2021-11-17 06:50 GMT
அனைத்து ரெயில்களும் நின்று செல்லாத காரணத்தால் பயணிகள் வருகை குறைந்துள்ளது.
மடத்துக்குளம்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோவை-திண்டுக்கல் வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது தான் சில ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. உடுமலை - பழனி இடையே உள்ள மடத்துக்குளம் ரெயில் நிலையம், 50 ஆண்டுகளை கடந்து செயல்படுகிறது.

திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளம், பொள்ளாச்சி, உடுமலை வழியாக மதுரைக்கும், பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், கரூர் வழியாக சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவை மடத்துக்குளம் ரெயில் நிலையம் வழியாக செல்கின்றன. ஆனால் அங்கு நிற்பதில்லை.

பொதுமக்கள் கூறுகையில், அனைத்து ரெயில்களும் இங்கு நின்று செல்லாத காரணத்தால் பயணிகள் வருகை குறைந்துள்ளது. எனவே அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News