செய்திகள்
பேராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

உடுமலையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published On 2021-11-16 14:35 IST   |   Update On 2021-11-16 14:35:00 IST
உடுமலை அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
தாராபுரம்:

கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உடுமலை அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் இன்று 2-வது நாளாக கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கான காரணமான ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News