செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

கிரைண்டர் சுவிட்ச் போடும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் மரணம்

Published On 2021-11-14 09:49 GMT   |   Update On 2021-11-14 09:49 GMT
திருவையாறு அருகே கிரைண்டர் சுவிட்ச் போடும் போது மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவையாறு:

திருவையாறு அருகே நடுக்கடை ஹத்திஜா நகரைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 34). இவரது மனைவி ஹத்திஜா பீவி (26). இவர்களுக்கு முகமது உஸ்மான் (3) என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று ஹத்திஜா பீவி கிரைண்டரில் அரிசியைப் போட்டுவிட்டு மாவு அரைக்க சுவிட்சை போடும் போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹத்திஜாபீவி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே ஹத்திஜாபீவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News