செய்திகள்
கோப்புபடம்

பனியன் தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி

Published On 2021-11-13 13:05 IST   |   Update On 2021-11-13 13:05:00 IST
பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர்:
 
திருப்பூர், அங்கேரிபாளையம், மாகாளியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சந்திர போஸ் ( வயது 28). இவர் சம்பவத்தன்று இரவு பெரியார் காலனியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் சந்திரபோசிடம் இருந்த செல்போனை பறித்து மின்னல் வேகத்தில் தப்பினர்.

அதிர்ச்சியடைந்த சந்திரபோஸ் சத்தம் போட்டு கொள்ளையர்களை விரட்டினார். சத்தம் கேட்டு பொதுமக்களும் சேர்ந்து அவர்களை விரட்டினர். அவிநாசிரோடு எஸ்.ஏ.பி.பஸ் நிறுத்த பகுதியை தாண்டி சென்ற போது இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அவர்களை பிடித்து தர்ம அடிகொடுத்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் கூடலூர் வாழவயல் பகுதியை சேர்ந்த கார்த்திக் (18), அர்ஜுன்(23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News