செய்திகள்
நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டாம்

நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டாம் - பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

Published On 2021-11-12 18:00 IST   |   Update On 2021-11-12 19:55:00 IST
கனமழை, நிலச்சரிவு அபாயம் இருப்பதால் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், வரும் 13,14,15,16 -ஆகிய தேதிகளில்  நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

இந்நிலையில் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கனமழை, நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
Tags:    

Similar News