செய்திகள்
விபத்து காயம்

வேதாரண்யம் அருகே அரசு பஸ் டயர் வெடித்து வாலிபர் காயம்

Published On 2021-11-05 20:41 IST   |   Update On 2021-11-05 20:41:00 IST
வேதாரண்யம் அருகே அரசு பஸ் டயர் வெடித்து வாலிபர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற அரசு பேருந்து கரியாப்பட்டினம் பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்பக்க டயர் வெடித்து பேருந்தில் பயணம் செய்த கட்டிமேடு சேர்ந்த கார்த்திக் வயது 34 என்பவர் காலில் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News