செய்திகள்
வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் வாங்கல் பகுதியை சேர்ந்தவர் நர்மதா (வயது 28). இவர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பாலசுப்ரமணியன் (40) என்பவருடன் எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்தநிலையில் கணவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரின் தந்தை சுந்தரம் (65), தாய் மருதாயி (60) ஆகியோர் வரதட்சணை கேட்டு மிரட்டி வருவதாக கூறினார். இதையடுத்து வரதட்சணை கேட்டு மிரட்டியதாக பாலசுப்ரமணியன் உள்பட 3 பேர் மீது வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.